கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு

புதன், 23 பிப்ரவரி, 2011

ஜாதகம் பார்க்காதீங்க!


என்னங்க ஜோதிடப் பூக்கள் வலைப் பதிவில் ஜாதகம் பார்க்காதீங்கன்னு எதிர் மறையான பதிவு வருகிறதேன்னு நினைக்கீறங்க அதானே. ஆமாங்க ஜாதகம் பார்க்காதீங்கன்னு தான் சொல்றேன் யாருக்குன்னா காதலர்களுக்கு மட்டும் தான். இன்றைக்கு பெரும்பாலும் காதல் வராதாவர்களே இருக்க் முடியாது. காதல் வரும் வயதைப் பொறுத்து அவர்களின் காதல் வலிமை இருக்கும் என்று சொல்லலாம்.


பள்ளிப் பருவத்தில் வரும் காதல்கள் பெரும்பாலும் திருமணம் வரை வருவதில்லை என்பது எதார்த்தமான ஒரு விஷயம்.  ஏனெனில் பள்ளிப் பருவத்தில் வரும் காதலில் எதிர்கால வாழ்கை மற்றும் சமூகம் பற்றிய தெளிவான அறிவும் சிந்தனைகளும் இல்லாததாலேயே அவைகள் தொடருவதில்லை. ஆனால் அவைகள் வாழ்க்கையில் என்றும் நீங்கா பசுமையானவையே ஆகும்.

பள்ளி பருவத்திலே காதலித்தவர்கள் பெரும்பாலானவர்கள் அடுத்த பருவமான கல்லூரிக்கு செல்லும் போதே அடுத்த காதலும் துவங்கி விடுகிறது. ஒரு சிலருக்கு தான் பள்ளிப் பருவக் காதல் கல்லூரி பருவத்திலும் தொடருகின்றன. அவர்கள் அதிர்ஷ்டசாலிகளா அல்லது துரதிரஷ்டசாலிகளா என்பதை உங்க முடிவுக்கே விட்டு விடுகிறேன். இந்த கல்லூரிப் பருவத்தில் வரும் காதல் ஓரளவிற்கு தெளிவும், சமூகப் புரிதலும் இருப்பதனால் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் காதலில் வெற்றிப் பெற்று திருமணம் வரை செல்லுகின்றனர். அவர்களின் வாழ்க்கையும் இனிமையாகவே இருக்கின்றன. சிலருக்கு திருமண வாழ்க்கை தோல்வியடைந்தும் விடுகின்றன.

இன்னும் ஒரு சாரருக்கு கல்லூரிப் பருவத்தை தாண்டி வேலைக்கு சென்ற பின்னர் தான் காதலேப் பிறக்கும். இருவரும் வேலைச் சென்றுக் கொண்டிருப்பவராயின் சமூகத்தில் தங்களுக்கென்று உள்ள இடம் மற்றும் வாழ்க்கைப் பற்றிய தெளிவான அறிவு பக்குவத்தால் அவர்களும் காதலில் வெற்றிப் பெற்று திருமணப் பந்தத்தில் இணைகின்றனர். இந்த திருமணங்களிலும் வெற்றி தோல்வி இரண்டுமே உண்டு.

சரி இந்த கதையெல்லாம் இப்ப எதுக்கு. ஏன் காதலர்கள் ஜாதகம் பார்க்காதீங்கன்னு சொல்றீங்க அதை சொல்லுங்க அதானே.

சரி விஷயத்திற்கு வருவோம். ஒரு காதல் முறிந்து போவதற்கு ஆண், பெண் இருவருக்குமிடையே உள்ள கருத்து வேறுபாடுகள், கெட்டப் பழக்கங்கள், பணம், சாதி, மதம், அந்தஸ்து, மற்றும் சமூகம் இந்த மாதிரி ஏகப்பட்ட காரணங்கள் உண்டு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இன்றைய காலக்கட்டங்களில் காதலர்கள் தாங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தவுடன், அவர்களின் காதலைப் பெற்றோர்களிடம் சொன்னால் முதலில் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அப்படியே சம்மதிக்கலாம் என்ற முடிவிற்கு பெற்றோர்கள் வந்தால் உடனே ஜாதகம் பார்ப்போம், பொருத்தம் பார்ப்போம் சொல்லுவாங்க...எல்லாம் சரியாக வருமென்றால் கல்யாணம் பற்றி பேசலாம். அப்படி இல்லையென்றால் நிச்சயமாக வேற ஒருத்தரைத் தான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நிபந்தனையும், நிர்ப்பந்தமும் வருகிறது. அந்த மாதிரி காதலர்களின் பெற்றோர்கள் ஜாதகம் பார்த்த பிறகு நின்றுப் போனக் கல்யாணங்கள் பல உண்டு.

இப்ப கொஞ்சம் மாடர்ன் டிரெண்டு இல்லையா அதான் காதலர்களே அவங்க ஜாதகங்களை கையிலெடுத்துக்கிட்டு நம்ம கல்யாணம் நடக்குமா நடக்காதா? என்று கேட்டு ஜோதிடர்களை அணுகிறது சாதரண விஷயமாகிவிட்டது. ஒரு கல்லூரி படிக்கிற பொண்ணு அவளோடு படிக்கின்ற இரண்டு மூன்று ஆண் நண்பர்களுடைய ஜாதகங்களை எடுத்துக் கொண்டு வந்து இதுல "இவங்க மூணு பேரையுமே எனக்கு பிடிக்கும். இருந்தாலும் இவன் தான் என்னை ரொம்ப காதலிக்கிறதா சொல்றான், இதுல யார் பெஸ்ட்ன்னு கொஞ்சம் பார்த்து சொல்லுங்க" அப்படின்னு எல்லாம் ஜோதிடரிடம் கேட்கிறாங்க.  ஒரு சில பெண்கள் இப்ப காதலிக்கிறதிற்கு முன்பே பையன் என்ன ஜாதி, என்ன ஸ்டேடஸ் நம்ம அப்பா அம்மா ஒத்துகுவாங்களா என்றெல்லாம் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கிறாங்க. பசங்க மட்டும்  சளைத்தவர்களா என்ன அவங்களும் இந்த மாதிரியெல்லாம் ஜாதகங்களை தூக்கிட்டு திரியறதும் நடந்துகிட்டு தான் இருக்கு. அவங்க இன்னும் ஒரு படி மேல போயி எந்த நாள் நட்சத்திரத்தில காதலை சொன்னால் காதல் கைகூடும்ன்னு கேட்கிற அளவிற்கு தான் இருக்காங்க.

காதல்னாலே ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடம் முழு நம்பிக்கை வருவது தானே. அதாவது இரு மனங்களின் சங்கமம் தானே காதல். இப்படி இரண்டு, மூன்று வருடங்கள் மனமொத்து காதலித்தப் பிறகு இரண்டு பேருக்கும் பொறுத்தம் இருக்கான்னு பார்க்கலாம்னு ஜோதிடர் கிட்ட போக அந்த ஜோதிடரும் இடக்கு மடக்கா சொல்லப் போக அதைக் கேட்ட இரண்டு பேருக்கும் இவ நமக்கு சரியா வரமாட்டாள் (அ) இவன் நமக்கு சரியா வரமாட்டான் போல என இரண்டு பேரின் மனசுக்குள்ளும் ஒரு மெல்லிய சிந்தனை இழையோட ஆரம்பிக்கும். பிறகு போக போக அந்த மெல்லிய சிந்தனை வலுவடைந்து சந்தேகமாய் மாற போகப் போகக் கருத்து வேறுபாடு உண்டாகி மெல்ல காதல் விரிசல் அடைய ஆரம்பிக்கும். ஒரு கட்டத்தில் காதல் உடைந்தே போய்விடும். இப்படி அவங்களோட பல வருடக் காதல் அவங்க ஜோதிடரை சந்தித்த அந்த 15 நிமிஷ நேரத்தாலேயே தீர்மானிக்கப் பட்டு உடைந்து விடுகிறது.

ஒருவரை காதலிப்பதற்கு முன்பே எத்தனை தடவை வேண்டுமென்றாலும் யோசிக்கலாம் எவ்வளவு காலம் வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளலாம். அது தவறில்லை. ஆனால் நம்பி காதலித்த பிறகு ஜோதிடர்களை தேடிச் சென்றால் நிச்சயமாக உங்கள் காதல் திருமணத்தில் முடியாது என்று தான் நான் சொல்வேன். ஏனென்றால் ஜோதிடர்களிடம் பலன் கேட்டல் என்பது மனோரீதியான பாதிப்புகளை உண்டு பண்ணும். ஒரு ஜோதிடரிடம் பலன் கேட்கும் போது அந்த ஜோதிடர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளையும் நேரடியாக பலன் கேட்பவரின் மனதில் மிக ஆழமாக பதிய வைக்கும் சக்தியுடையது தான் இந்த ஜோதிடம். இதில் எதிர் மறையான பலன்கள் சொல்லப்படும் போது அந்த பலன்களை உள்வாங்கி அதனை தாங்கும் சக்தி பெரும்பாலான சாமனிய மக்களிடம் இருப்பதில்லை. இதனால் எவ்வளவு ஆழமாக காதலித்தவர்களும் கூட ஜோதிடரிடம் சென்று வந்த பிறகு அவர்கள் தங்கள் காதலை அணுகும் முறையில் மாற தொடங்கி விடுகின்றனர்.

காதல் கோட்டை திரைப் படத்தில் வரும் பாடல் ஒன்றின் வரிகள் தான் எனக்கு ஞாபகம் வருகிறது.

"ஜாதி இல்லை பேதம் இல்லை
ஆதாம் ஏவால் தப்பும் இல்லை - காதல்

ஜாதகங்கள் பார்ப்பதில்லையே அது
காசு பணம் கேட்பதில்லையே"

இப்படி எதுவும் பார்க்காமல் வந்தால் தாங்க அது காதல். ஆனால் அந்த காதல் வந்தபிறகு எல்லாத்தையும் பார்த்து அதற்காக உயிருக்கு உயிரா காதலிச்சவங்களை விட்டு காதலை துறந்து வேறுஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிறதுல என்ன சுகம்ங்க கிடைக்கும்.

எப்படி காதல்னு வந்துட்டா ஜாதி, மதம், பணம் இதெல்லாம் பார்க்க கூடாதுன்னு நாம நினைக்கிறமோ அதே மாதிரி இந்த ஜாதகத்தையும் பார்க்காதீங்க.

10 பொருத்தம் இருந்தாலும் மனப் பொருத்தம் இல்லையென்றால் கல்யாணம் கட்ட கூடாது, அதேபோல 10 பொருத்தம் இல்லாவிட்டாலும் மனப் பொருத்தம் இருந்தால் மணமுடிக்கலாம் என்றுதான் ஜோதிடம் சொல்கிறது. மனப் பொருத்ததிற்கு என்றுமே ஜோதிடம் தடையாக இருந்ததில்லை. அப்படியிருக்க காதலர்கள் மட்டும் ஜோதிடம் பார்த்து தங்கள் மனப் பொருத்ததை உடைத்து மண வாழ்வினை துறந்துவிடக் கூடாதென்பதற்காக தான் இந்த பதிவு

இப்ப சொல்லுங்க ஜோதிடப் பூக்களில் இந்த எதிர் மறையான தலைப்பு சரிதானே.

படம்: நன்றி கோலி டாக்.

5 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…

Nice.,

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_23.html

ஜோதிடப் பூக்கள்! சொன்னது…

வருகைக்கு நன்றி. தங்களின்
"ஒரு மனசாட்சியின் மரணம்" கவிதை மிக அருமை.

tamilan சொன்னது…

தங்கள் பதிவிற்கு தொடர்பில்லாத மறுமொழி என்று தயவு செய்து இதை நீக்கிவிடாதீர்கள்.

சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

===>இந்துக்களே! விழிமின்! எழுமின்! 7. காம சூத்திரம். நிர்வாண சாமியார்கள். பிணந்திண்ணி சாமியார்கள். புனித கங்கையில் காலைக்கூட நனைக்க மனம் வரவில்லை. <===

.

டக்கால்டி சொன்னது…

அருமை

ஜோதிடப் பூக்கள்! சொன்னது…

நன்றி டக்கால்டி!

கருத்துரையிடுக

பதிவு பிடிச்சிருந்தா வோட்டு போட்டு உங்க உரிமையையும், கருத்து சொல்லி உங்க உணர்வையும் வெளிப்படுத்துங்க.ஜோதிட சம்பந்தமான கேள்விகள் மற்றும் சந்தேகங்களை சும்மா கேளுங்க. என்னால் முடிந்த அளவில் உங்களுக்கு என்னுடைய பதில்களை அளிக்கிறேன்.