கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு

வியாழன், 15 செப்டம்பர், 2011

சகட யோகம்

ஒருவருடைய ஜனன ஜாதகத்தில், குருவுக்கு 6, 8, 12 - மிடங்களில் சந்திரன் நின்றால் அது சகட யோகமாகும். சரி, இந்த “சகட யோகம்” என்பது என்ன செய்யும்?
இந்த யோகம் இருக்கிற ஜாதகர் உண்மையில் நிறைய கஷ்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த யோகமுள்ளவர்கள் வாழ்க்கையில் ஒரே நிலையில் இருக்க மாட்டார்கள். ஒரு நாள் பார்த்தால் நல்ல 5 ஸ்டார் உணவகத்தில் சாப்பிட்டு சந்தோஷமாக இருப்பார்கள். திடீரென்று கையேந்தி பவனில் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். அதாவது வாழ்க்கையில் நல்ல சந்தோஷத்தையும், அதே நேரத்தில் கடுமையான துக்கங்களையும் ஒன்றாக அனுபவிப்பார்கள். கடுமையாக போராடும் குணமுடையவர்கள்.


ஒரு மாட்டு வண்டியிலுள்ள சக்கரத்தில் மேலே உள்ள ஒரு புள்ளி கண்டிப்பாக கீழே வந்தே ஆக வேண்டும், அதே போல கீழே வந்த புள்ளி மீண்டும் மேலே போயே தீர வேண்டும். இது சுழற்சி. இதையே யாரவது மாற்ற முடியுமா? 


அது போல தான் இவர்களுடைய வாழ்க்கையும் இருக்கும். பெரும்பாலும் இவர்களை வீழ்ந்து விட்டார்கள், இவர்கள் அவ்வளவு தான் என்று நினைக்கும் போது இவர்கள் விஸ்வரூபம் எடுத்து நிற்பார்கள். அதே போல் சடார் என்று கீழேயும் வீழ்ந்து விடுவார்கள்.


வெற்றி தோல்விகளை பார்த்து பழகியவர்கள் என்பதால், எதையும் தாங்கும் வலிமை படைத்தவர்கள். அதே நேரத்தில் விரக்தியின் உச்சத்திற்கு செல்ல கூடியவர்கள்.


யோகத்தில் இது தீய யோகமாகவே சொல்லப்படுகிறது.
இந்த சகட யோகத்தோடு, வேறு நல்ல யோகங்களும் ஜாதகத்தில் சேர்ந்து இருந்தால் மட்டுமே சகட யோகத்தின் கெடு பலன் குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு. இல்லையேல் கெடு பலன்களே அதிகம் நடக்கும். 


இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட சதவீத மக்களுக்கு இந்த யோகம் இருக்கும் எனலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு பிடிச்சிருந்தா வோட்டு போட்டு உங்க உரிமையையும், கருத்து சொல்லி உங்க உணர்வையும் வெளிப்படுத்துங்க.ஜோதிட சம்பந்தமான கேள்விகள் மற்றும் சந்தேகங்களை சும்மா கேளுங்க. என்னால் முடிந்த அளவில் உங்களுக்கு என்னுடைய பதில்களை அளிக்கிறேன்.