கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு

வெள்ளி, 17 ஜூன், 2011

யார் வெளிநாட்டிலேயே செட்டில் ஆவார்கள்?

இந்தப் பதிவில் நாம் இன்று இரண்டு யோகங்களைப் பற்றிப் பார்க்கலாம். முதலாவது வெளிநாட்டு யோகம் பற்றியும், இரண்டாவது தர்மகர்மாதி யோகம் பற்றியும் பார்ப்போம்.


1. வெளிநாட்டு யோகம்





இன்றைய காலக் கட்டங்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டிற்கு சென்று வருவதும், ஒரு சிலர்கள் அங்கேயே தங்கிவிடுவதும் உண்டு. பெரும்பாலும் 12மிடம் தான் வெளிநாட்டுப் பயணங்களை தீர்மானிக்கிறது என்றாலும் ஒன்பதாம் இடம் தான் வெளிநாட்டிலேயே செட்டிலாகும் யோகத்தைப் பற்றி தெளிவாக கூறுகின்றது. நமக்கு தெரிந்த வரையில் மக்கள் 5லிருந்து 10, 15 ஆண்டுகள் வரை தங்கிவிட்டு மீண்டும் தங்கள் சொந்த நாட்டிற்கே திரும்பி வந்து விடுகின்றனர். இவர்களுக்கு இந்த யோகம் பொருந்தாது. அவர்களுடைய ஜாதகத்தில் அதற்கு வேறுவகையான யோகங்கள் அமைந்திருக்கும். வெகு சிலருக்கு தான் வெளிநாட்டிலேயே செட்டில் ஆகும் யோகம் உண்டு. அதனை இந்த ஜோதிடப் பாடல் தெளிவாக்குகிறது.


ஜோதிடப் பாடல்

கண்ட பாக்கியா திபனும்
         கருது வெள்ளி யிருவோரும்
மிண்டு சன்மத் திருந்திடினும்
         வேந்தன் பாக்கி யாதிபத்தில்
அண்டி உறினும் பிறதேசத்து
         அரசனாய் தனவான் ஆகியுமே
பெண்ட தொன்றை மணம்புரிந்து
          பிரதா பங்கள் பெருங்குணவான்


ஒன்பதாம் அதிபதியும், சுக்கிரனும் கூடி லக்கினத்தில் இருந்தாலும், குருவும் ஒன்பதாம் அதிபதியும் கூடி பத்தில் இருந்தாலும், பிறருடைய நாட்டில் ராஜ மரியாதையுடன், மிகுந்த செல்வத்துடன், பெண்ணொருத்தியை மணம்புரிந்து வாழ்வான்.


2. தர்மகர்மாதி யோகம்

யோகத்திலே இந்த தர்மகர்மாதி யோகத்தினை மிக உயர்வாக நமது ஜோதிட நூல்கள் கூறுகின்றன. அதாவது தான் செய்யுகின்ற தர்மத்திற்கும், கர்மத்திற்கும் தானே அதிபனாக இருப்பது தான் இந்த தர்மகர்மாதி யோகம்.
தான் ஈட்டுகின்ற பொருளை யாருடைய அடிபணிதலுக்கும், நிர்பந்தத்திற்கும் ஆளாகாமலும் தர்ம கரியங்களுக்கு உபயோகப் படுத்துவனை உலகம் எங்ஙனம் போற்றும் என்பதனை நாம் அறிவோம் அல்லவா?
அதனால் தான் இந்த யோகம் மிக உயர்ந்த இடத்தினை பெறுகின்றது. இதனை பின்வரும் ஜாதக அலங்காரப் பாடலில் இருந்து அறியலாம்.



ஜோதிடப் பாடல்

குணமார் தன்ம கன்மாதி
          கூறுஞ் சுபக்கோ ளுடன்கூடி
மணமார் தன்ம கன்மத்தின்
          மருவி இருக்கின் மன்னவனாம்
உணர்வாய் இவர்கள் இருவருடன்
          ஓரைந் தாதி யுடன்கூடிப்
புணர்வர் எஙகே இருந்தாலும்
           பூமி புரக்கும் புரவலனாம்


9-10ஆம் அதிபதிகள் தர்மகர்மாதிபதிகளாவர். இவர்கள் இருவரும் கூடி நற்கோளுடன் சேர்ந்து பத்திலே அமர்ந்து இருந்தால் அவன் நாடாளும் அரசனாவான். இவர்களுடன் ஐந்தாம் அதிபதியும் கூடி ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் அவன் பூமியறிந்த மன்னனாவான்.


பெரும்பாலும் ரிஷப லக்ன மற்றும ராசிக்காரர்களுக்கு தர்மகர்மாதிபதியாக சனிபகவானே வருவதால் இவர்கள் பெரும்பாலும் தான் ஈட்டும் பொருளை தானே செலவு செய்யும் அதிகாரம் இயல்பிலேயே பெற்றவர்கள். அதற்காக இவர்களுக்கு தர்மகர்மாதி யோகம் உண்டு என்று பொருள் அல்ல. யோகம் என்பது மேற்சொன்ன அமைப்பினை பெற்றிருந்தால் மட்டுமே ஆகும். ஒன்பது பத்தாம் அதிபதிகள் பரிவர்த்தனை அடைவது கூட ஒருவகையான தர்மகர்மாதி யோகம் தான். ஆனால் அதன் பலன் மேற் சொன்ன பலனிலிருந்து வேறுபட்டே இருக்கும். ஏனெனில் மேற் சொன்ன இரண்டு யோகங்களுமே அரிய வகை யோகங்களே ஆகும்.

பூக்கள் மலரும்......

1 கருத்து:

RISHAN SHERIF சொன்னது…

அன்பு வணக்கங்கள்,

வலைப்பதிவுக்கு நான் புதியவன், வலைப்பதிவுகளை

அண்மையக் காலமாக படித்து வருகின்றேன். எழுத

வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இருந்தது இல்லை.

இருப்பினும் - மதம் சார்ந்த பகுத்தறிவை மக்களுக்கு,

குறிப்பாக இஸ்லாமிய மக்களுக்கு அளிக்க வேண்டும்

என்ற அவாவால் புதிய வலைப்பதிவை ஆரம்பித்து

எழுதுகின்றேன். உங்களைப் போன்றோரின்

கருத்துக்களை, வழிக்காட்டல்களை எதிர்ப்பார்க்கின்றேன்.

நன்றி !

கருத்துரையிடுக

பதிவு பிடிச்சிருந்தா வோட்டு போட்டு உங்க உரிமையையும், கருத்து சொல்லி உங்க உணர்வையும் வெளிப்படுத்துங்க.ஜோதிட சம்பந்தமான கேள்விகள் மற்றும் சந்தேகங்களை சும்மா கேளுங்க. என்னால் முடிந்த அளவில் உங்களுக்கு என்னுடைய பதில்களை அளிக்கிறேன்.