கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு

புதன், 11 மே, 2011

அடுத்த 'கோ' யாரு?


"தேர்தல் முடிவுகள் என்னவாக இருக்கும்?" என்று அரசியல் வட்டாரத்தில் ஒரே பரபரப்பும், குழப்பங்கள் நீடித்துக் கொண்டு தானிருக்கின்றன. ஊடகங்களும் "எக்ஸிட் போல்" கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இதிலே இரண்டு 'திமுக' விற்கு ஆதாரவகாவும், மற்ற ரெண்டு கணிப்புகள் அதிமுகவிற்கு ஆதரவாகவும் வந்துள்ளன. "எதுதான் சரி" என்று ஒரே குழப்பமாக இருக்கிறது. போதாக் குறைக்கு 'நக்கீரன்' தன் திமுக ஆதரவை மீண்டும் ஒரு முறை காட்டியிருக்கிறது. மக்களாலும் ஒரு தெளிவான நிலைக்கு வர இயலவில்லை.

என்னதான் மக்கள் அதிகமாக வாக்களித்திருந்தாலும், ஊழல் குற்றசாட்டுக்கள் இருந்தாலும் கூட திமுகவின் செல்வாக்கு குறைந்தபாடில்லை என்றே தான் சொல்ல வேண்டும்.

சரி நம்ம "ஜோதிடம்" என்ன தான் சொல்லுதுன்னு பார்ப்போம். எனக்கு கிடைத்த தகவல்களை கொண்டு 'திரு. கருணாநிதி' மற்றும் 'செல்வி. ஜெயலலிதா' ஜாதகங்களை கணித்து பார்க்கும் போது, நடந்து முடிந்த குருப் பெயர்ச்சியினைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது தமிழக்த்தில் ஆட்சி மாற்றம் என்பது நிச்சயமான ஒன்றாக தான் தெரிகிறது.

ஜெயலலிதா அவர்கள் குரு எட்டிலிருக்கும் போது தேர்தலை எதிர்கொண்டார். ஆனால் இப்போது குரு பெயர்ச்சியாகி ஒன்பதாமிடத்திற்கு வந்து விட்டார்.

அதே போல கருணாநிதி அவர்களும், குரு 11லிருக்கும் போது தேர்தலை எதிர்கொண்டார், இப்போது குரு பெயர்ச்சியாகி 12மிடத்திற்கு வந்துவிட்டார்.

இதை ஜோதிடத்தில் "transition period" என்று சொல்வார்கள். அதாவது "கிரகங்கள் மாறும் காலங்கள்" என்பர். பொதுவாகவே இந்த மாதிரி காலகட்டங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஜனன ஜாதகம் மற்றும் பலன்களை கணிப்பது என்பது சற்றே சிரமமான மற்றும் சவாலான ஒன்றாகும். சந்தி அமைப்புடைய ஜாதகங்களை கணிப்பது என்பதும் ஜோதிடர்களுக்கு ஒரு மிகப் பெரிய சவாலகும்.

இப்போது 'கிரகங்கள் மாறும் காலம்' என்பதால், தான் ஊடகங்களும் கருத்துக் கணிப்புகளை மாறி மாறி வெளியிடுகின்றன. எப்போதுமே 'குருப் பெயர்ச்சி' மனிதர்களை நேரடியாக பாதிக்கும். அதாவது குரு தான் இருக்கும் இடம் மற்றும் பார்வையைப் பொறுத்தே பலன்களை தருவார். அவர் நேர்மை கிரகம் என்பதால் தக்க பலனை வழங்குவார். அதே சமயம் இரக்க குணமுடையவர்.



சரி நம்ம 'குரு' அடுத்து யாரை 'கோ' (அதாங்க முதலமைச்சர்) வாக்க போகிறார் என்று பார்க்கலாம்.

ஜெயலலிதா அவர்களுக்கு தற்போது 'குரு பலம்' உள்ளது. ராசிக்கு 9லிலும் லக்னதிற்கு 11லிலும் குரு அமர்ந்து மிகப் பலமாகவே உள்ளார். எனவே 'தேர்தல் முடிவுகள்' இவருக்கு சாதகமாக வந்து ஆட்சி அமைப்பதற்கான பெரும்பாலான சாத்தியக் கூறுகள் உள்ளன. இவருக்கு 'குரு திசை' ஆரம்பித்திருக்கிறது. சிம்ம ராசிக்காரர்களுக்கு 'குரு திசை' யோகமான திசையாகும். பொதுவாக ஒவ்வொரு 'திசை' மாறும் போதும் மனிதரின் 'புத்தி மற்றும் குணாதிசயங்கள்' எல்லாம் நிச்சயம் மாறும். எனவே நிச்சயம் இனி பழைய ஜெயலலிதாவினை பார்க்க முடியாது. குரு 'நேர்மைக் கிரகம்' என்பதால் தெய்வ பலமும், தொண்டுள்ளமும் கொண்ட ஜெயலலிதாவினை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்க்க வேண்டிய நாட்கள் வந்துவிட்டன.

கருணாநிதி அவர்களுக்கு தற்போது 'குரு பலம்' சுத்தாமாக இல்லை என்றே தான் சொல்ல வேண்டும். ராசிக்கு 12லிலும் லக்னத்திற்கு 10மிடத்திலும் குரு அமர்ந்திருப்பதால் நிச்சயமாக பதவி பறிபோவது உறுதி. எவ்வளவு கடினாமாக முயன்றாலும் இந்த முறை ஆட்சியமைக்க முடியாது. குறிப்பாக இவருக்கு தற்போது 'சுக்கிர திசை' நடந்து வருகிறது. இவருக்கு மட்டுமல்ல கட்சிக்கும் 'சுக்கிர திசை' தான் நடந்து வருகிறது. ராசிநாதனின் திசை வருவதென்பது யோகமான ஒன்றாகும். அதனால் தான் கடந்த பத்தாண்டுகளில் இவரது வளர்ச்சி 'அசுர' வேகத்தையடைந்தது. இன்னும் பத்தாண்டுகள் உள்ளன. இந்த திசையே இவருக்கு 'மாரகத்தையும்' தரக் கூடியது என்பதால் இவருக்கு இநத திசையிலேயே மரணமும் தழுவக்கூடும். இந்த ஓராண்டுகள் முழுவதும் பல சிக்கல்கள் காத்திருக்கிறது இவருக்கு என்பது மட்டும் திண்ணம்.

எவ்வளவு தான் கணிக்கும் 'சக்தி' இருந்தாலும், "அடுத்த விநாடியின் ஆச்சரியத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு சமானியன் தான் நான்".

யார் வெற்றிப் பெற்றால் என்ன நாம் எல்லாம் வேண்டுவது ஊழலற்ற நல்லாட்சி. அதை யார் தான் கொடுப்பார்களோ??? தெரியவில்லை.

இந்த பதிவினை எழுதலாமா வேண்டாமா என்று யோசித்து பின்னர் எழுதினேன். தேவையில்லாமல் என் மீது நானே அரசியல் சாயம் பூசிக் கொள்ள விரும்பாததேக் காரணம் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு பிடிச்சிருந்தா வோட்டு போட்டு உங்க உரிமையையும், கருத்து சொல்லி உங்க உணர்வையும் வெளிப்படுத்துங்க.ஜோதிட சம்பந்தமான கேள்விகள் மற்றும் சந்தேகங்களை சும்மா கேளுங்க. என்னால் முடிந்த அளவில் உங்களுக்கு என்னுடைய பதில்களை அளிக்கிறேன்.