கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு

வியாழன், 7 ஏப்ரல், 2011

60 மணி நேரம் கடிகாரத்தில் இல்லையே?




நம் முன்னோர்கள் வகுத்து வைத்த கணித முறைகளைகளின் ஆழத்தை அறிய அறிய நமக்கு ஒரு பிரமிப்பே உருவாகி விடும். அந்த அளவிற்கு நம் முன்னோர்களின் அறிவு திறனை நாம் போற்றிட வேண்டும்.

இன்று நாம் கடைபிடிக்கும் கால அளவு முறைகள் எல்லாம் நம்மால் என்றோ வகுக்கப் பட்டுவிட்டன.


60விநாடி என்பது 1 நாழிகை

60 நாழிகை என்பது 1 நாள்

2 1/2 நாழிகை என்பது 1ஓரை

2 1/2 நாழிகை என்பது 1 ஓரை

3 1/2 நாழிகை என்பது 1முகூர்த்தம்

2 முகூர்த்தம் என்பது 1 சாமம்

4 சாமம் என்பது 1 பொழுது

2 பொழுது என்பது 1 நாள்

15 நாள் என்பது 1 பட்சம்

2 பட்சம் என்பது 1 மாதம்

6 மாதம் என்பது 1 அயனம்

2 அயனம் என்பது 1 வருடம்

60 வருடம் என்பது 1 வட்டம்

120 வருடம் என்பது 1 மனித ஆயுள் வட்டம்


நம் முன்னோர்களின் கணித கால முறைகள் எல்லாம் 60 என்ற எண்ணை மையமாக் கொண்டு பிரிதிருப்பார்கள்.

ஆனால் இன்று நாம் ஒன்றும் ஒரு நாளைக்கு 60 மணி நேரம் என்று கடிகாரத்தினை அமைத்திருக்க வில்லையே?

இதோ அதற்கான விளக்கம்.
2 1/2 நாழிகை என்பது ஒர ஓரையாகும். அதாவது 60 நாழிகை என்கிற ஒரு நாளுக்கு 24 ஓரைகள் வருகின்றன. இந்த 24 மணி நேரம் என்ற கணக்கு எப்படி வந்தது என்று தற்போது உங்களுக்கு புரிகிறதா?

ஒரு மனிதனின் முழுமையான ஆயுள் வட்ட வாழ்வில் ஒன்பது கிரகங்களும் ஒன்பது திசைகளா வந்து மனிதனின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. உதாரணத்திற்கு சூரிய திசை என்று கொண்டோமானால் 6 வருடங்கள். இந்த 6 வருடங்களும் சூரியன் மட்டுமே மனிதன் மீது ஆதிக்கம் செலுத்திவிட முடியாது. இந்த 6 வருடத்தினை மீண்டும் அதே ஒன்பது கிரகங்கள் பங்கிட்டு கொண்டு ஒன்பது புத்திகள் ஒரே திசாவில் வருகின்றன. அதாவது ஒரு திசையில் ஒன்பது புத்திகள். அதே போன்று ஒரு புத்தியினை மீண்டும் ஒன்பது கிரகங்கள் பகிர்ந்து கொண்டு ஒன்பது அந்தரங்களாக வருகின்றன. அதாவது ஒரு புத்திக்குள் ஒன்பது அந்தரங்கள். இந்த அந்தரங்கள் பெரும்பாலும் மாதங்கள் அல்லது நாட்களிலேயே தான் வரும். இந்த நாட்களும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்ற ஏழு கிரகங்கள் பகிர்ந்து கொண்டு அந்த அந்தரத்தை வழி நடத்தும். ராகுவுக்கும், கேதுவுக்கும் கிழமைகள் கிடையாது. எனவே அவை இரண்டிற்கும் ராகு காலம், எமக் கண்டம் என்று எல்லா நாட்களிலும் பிரித்துக் கொடுத்து ஆதிக்கம் செலுத்த உரிமை கொடுக்கப் பட்டிருக்கிறது.

அப்படியே பார்ப்போமானால், எப்படி ஒரு திசாவினை ஒரே ஒரு கோள் மட்டுமே ஆட்சி செலுத்தவிடாமல் மற்ற கிரகங்கள் பகிர்ந்து கொண்டு ஆதிக்கம் செலுத்துகின்றனவோ அதேப் போன்று ஒரு நாளினையும் அந்த நாளுக்குரிய கிரகம் முழுமையாக ஆட்சி செய்துவிட முடியாது.
அவைகளும் ஏழு கிரகங்களால் பகிர்ந்து கொள்ளப் பட்டு அதாவது ஓரைகளாகப் பகுக்கப் பட்டு அந்தந்த கிரகங்களால் ஆட்சி செய்யப் படுகின்றன.
இன்று எந்த கிழமையோ அந்த நாளுக்குரிய கிரகத்திலிருந்து தான் அந்த ஓரை ஆரம்பிக்கும்.

உதாரணமாக இன்று ஞாயிற்றுக் கிழமை என்றால் காலை சூரிய உதயத்திலிருந்து 2 1/2 நாழிகை சூரிய ஓரை இருக்கும். பிறகு அடுத்த 2 1/2 நாழிகைக்கு சுக்கிர ஓரை இருக்கும். இதே போல அடுத்து புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என ஓரைகள் தொடர்ந்து வரும். செவ்வாய் ஓரை முடிந்த பிறகு மீண்டும் சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என இதே வரிசையில் ஓரைகள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும்.

எந்த முகூர்த்தத்தில் எந்த ஓரையினை தேர்ந்தெடுத்து எந்த காரியத்தை செய்ய வேண்டுமென்று நம் முன்னோர்கள் ஒரு பெரிய ஆராய்ச்சியே செய்து வைத்திருந்தனர். அதன்படி தான் பெரும்பாலான நேரங்களில் சுப காரியங்களை இன்றளவும் செய்து வருகின்றனர்.

எல்லாம் இயக்கங்களும் ஏதோ ஒரு அடிப்படையில் தான் இயங்கி கொண்டிருக்கின்றன. அந்த அடிப்படையை நாமும் உணரும் போது இறைவனின் படைப்பின் பிரம்மாண்டத்தை நாம் உணருவோமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு பிடிச்சிருந்தா வோட்டு போட்டு உங்க உரிமையையும், கருத்து சொல்லி உங்க உணர்வையும் வெளிப்படுத்துங்க.ஜோதிட சம்பந்தமான கேள்விகள் மற்றும் சந்தேகங்களை சும்மா கேளுங்க. என்னால் முடிந்த அளவில் உங்களுக்கு என்னுடைய பதில்களை அளிக்கிறேன்.